கோவை மாவட்டத்தில் வர்த்தகர்கள் முழு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முழு அடைப்புக்கு வர்த்தகர்கள் முழுஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர்.
திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை மற்றும் அவினாசி ஆகிய ஊர்களில் 80சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன.
கூடலூரில் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. ஆனால் அரசு பஸ்கள் பஸ்கள் ஓடின.
இம்மாவட்டத்தில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காத போதிலும், மேட்டுப்பாளையத்தில் சாலை மறியல்செய்ய முயன்ற ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, மாவட்டம் முழுவதும் 120 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications