பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானின் தோரா-போரா மலைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசித் தாக்கிவருவதால், அங்கு பதுங்கியிருந்த சர்வதேச தீவிரவாதி பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக்கூறப்படுகிறது.
நேற்று (வியாழக்கிழமை) 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகளை இந்த மலைப் பகுதிகளில் வீசினர்.
பின் லேடன் இந்தப் பகுதிகளில்தான் பதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க விமானங்கள்தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பதால், இங்கிருந்து பின் லேடன் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கிருந்து தப்பிய பின் லேடன், பாகிஸ்தானுக்குத்தான் ஓடியிருப்பார் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications