பெரியார் மையம் இடிப்பு: மக்களவை ஒத்திவைப்பு
டெல்லி:
பெரியார் கல்வி மையத்தை இடித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியதால் இன்று(வெள்ளிக்கிழமை) முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால் பிஜேபியினரும், மதிமுகவினரும் பெரும் கூச்சல் போட்டு வைகோவை பேச அனுமதிக்குமாறுகூச்சலிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் பெரும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவைகூட்டம் மதியம் வரை நடைபெறவில்லை.
மதிய உணவிற்குப் பிறகு மக்களவை கூட்டம் ஆரம்பிக்கையிலேயே காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.பதிலுக்கு பிஜேபியினரும் கூச்சலில் ஈடுபட்டனர். இதனால் சபை நடைபெறாமலேயே ஒத்திவைப்பதாக துணைசபாநாயகர் தெரிவித்தார்.
டெல்லி மாநகராட்சி வளர்ச்சிக் குழுமம்தான் பெரியார் மையத்தை இடித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிசெய்து வருவதால், இப்பிரச்சனையை மூடி மறைக்கவே காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டுமே பேச அனுமதித்தசயீது, பிஜேபியினரையும் மதிமுகவினரையும் பேசவிடாமல் தடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications