மேலும் பல போராட்டங்கள் நடத்த பாமக முடிவு
சென்னை:
கட்டண-விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக மேலும் பல நூதனப் போராட்டங்களைநடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:
இன்று (வெள்ளிக்கிழமை) நடந்து கொண்டிருக்கும் பந்த் தவிர, வரும் 17, 21 மற்றும் 27ம் தேதிகளில் பாமகநூதனப் போராட்டங்களை நடத்தவுள்ளது.
வரும் 17ம் தேதி போராட்டத்தின்போது, பாமகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் தமிழகம் முழுவதிலும்உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்துவார்கள்.
மாணவர்களின் கட்டண உயர்வைக் கண்டிக்கும் வகையில், கைகளில் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு அவர்கள்கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டு மாணவர்கள் வரும் 21ம் தேதி ஊர்வலம் செல்வார்கள்.
அதுபோல், வரும் 27ம் தேதி போராட்டத்தின்போது, கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக்கண்டித்து, பாமகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் ஒப்பாரிப் போராட்டம் நடத்தவுள்ளனர் என்றார் மணி