For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவேன்: ரணில் விக்கிரமசிங்கே

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கேநாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவது தான் தனது முதல் பணியாக இருக்கும் எனஅறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் நீண்ட ஆலோசனைநடத்தினார். நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பேண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

தவறு செய்பவர்கள் எந்த கட்சியை, அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கபோலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிருபர்களிடம் ரணில் கூறினார்.

இதுவரை எண்ணப்பட்ட 42 லட்சம் வாக்குகளில் இவரது ஐக்கிய தேசியக் கட்சி 49.21 சதவீத வாக்குகளையும்,அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி 37.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதன்படி ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 118 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. இதனால் ரணி விக்கிரமசிங்கே தனித்தே ஆட்சியை அமைக்க முடியும்.முன்னதாக தமிழர் கட்சிகளுடன் இணைந்து அவர் ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோல்வியை ஏற்கிறேன்: சந்திரிகா

இந் நிலையில் தனது கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் மக்கள் தீர்ப்பை மதிப்பதாகவும்அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X