ரீட்டா மேரி கற்பழிப்பு: 4 சிறை வார்டன்கள், 2 போலீசார் கைது
சென்னை:
செஞ்சி கிளைச் சிறையில் இளம் பெண் ரீட்டா மேரி என்பவரை கற்பழித்தாக கூறப்பட்ட வழக்கில் கிளைச்சிறையைச் சேர்ந்த 4 வார்டன்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரி என்ற 20 வயது இளம் பெண் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டு செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை அங்கிருந்த காவலர்கள் கற்பழித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இதுதொடர்பாக 2 வக்கீல்கள்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.
இதையடுத்து நீதிபதி தினகரன் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஐ.ஜி. திலகவதிக்கு உத்தரவிட்டார்.திலகவதி தலைமையிலான போலீஸ் குழு ரீட்டா மேரி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நிடத்தி உயர்நீதிமன்றத்தில்அறிக்கை கொடுத்தது. இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க நீதிபதி தினகர்உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் இறுதியில் செஞ்சி கிளைச்சிறையைச் சேர்ந்த வார்டன்கள் லாசரஸ், அன்பழகன், சேகர், ஜெயபால் மற்றும் ஆத்தூர் போலீஸ் கான்ஸ்டபிள்ருகேஷ், விபச்சார புரோக்கர் ஆனந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.