For Quick Alerts
For Daily Alerts
Just In
சாலை மறியல் செய்ய முயன்ற 150 பேர் கைது
சென்னை:
சென்னை மற்றும் விழுப்புரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த பந்த்தின்போது சாலை மறியல் செய்ய முயன்ற150 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டண-விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து இன்று எதிர்க் கட்சிகள் தமிழகம் முழுவதும் முழு அடைப்புநடத்துகின்றனர்.
இன்று காலை சென்னையில் சுமார் 50 பேர் சாலை மறியல் செய்ய முயன்றனர். சாலையில் தடுப்புக்களை ஏற்படுத்திபோக்குவரத்தைத் தடை செய்யவும் முயற்சித்தனர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் விழுப்புரத்தில் சாலை மறியல் செய்ய முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டதாக விழுப்புரம் போலீசார்தெரிவித்தனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]