பந்த்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாள் சம்பளம் "கட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க் கட்சிகள் நடத்தும் பந்த்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாள்சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் விலை வாசி, கட்டண உயர்வை கண்டித்து அதிமுக தவிர எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று(வெள்ளிக்கிழமை) பந்த் அறிவித்துள்ளன. இதனை தடுக்க அரசும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
அதன் முதல் கட்டமாக, இன்று பந்தை ஆதரிக்கும் வண்ணம் அரசு ஊழியர்கள் யாரேனும் வேலைக்கு வராவிட்டால்அவர்களின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கான சம்பளம் "கட்" செய்யப்படும் என்று தமிழக அரசுஅதிரடி முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை எல்லா அரசு அலுவலகங்களுக்கும் தலைமை செயலகத்திலிருந்துஅனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications