ஜெ. விடுதலை: குருவாயூரில் சசிகலா சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
பாலக்காடு:
ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் மற்றும் டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையானதற்காக, குருவாயூரில்சசிகலா சிறப்பு பூஜை செய்தார்.
கடந்த 4ந்தேதியன்று டான்சி மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலைசெய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு பின் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா குருவாயூர் கோயிலுக்கு சென்றார்.அங்குமகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜையும், புஷ்பாஞ்சலி பூஜையும் நடத்தினார்.
இதையடுத்து, திரூர் ஆலயத்தூரில் உள்ள ஆஞ்சனேயர் கோயில், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள காடாம்பூளைபகவதி அம்மன் கோயில் ஆகிய கோயில்களிலும் சசிகலா சிறப்பு பூஜை செய்தார்.
இந்த சிறப்பு பூஜைகள் அனைத்தும் பரப்பன் கோட்டையைச்சேர்ந்த உன்னிகிருஷ்ணன் பணிக்கரின்ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications