பள்ளி உணவில் பல்லி? - 52 மாணவர்கள் மயக்கம்
சென்னை:
கோவையில் சத்துணவு சாப்பிட்ட 31 மாணவிகள் உள்பட 52 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் பல்லி விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பல்லடம் அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த ஒருமாணவி மதிய உணவு சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு தலை சுற்றல் இருந்துள்ளது.
இதேபோல பல மாணவ, மாணவியரும் தலைசுற்றல் இருக்கிறது என்று சொல்லவே, சத்துணவு சாப்பிட்ட 52மாணவர்களையும் ஆசியர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மதிய உணவு சாப்பாட்டில் பல்லி விழுந்திருக்கலாம் என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
ஆனால் ஆசியர்கள் இதை மறுத்துள்ளனர்.மேலும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, மதிய உணவு கெட்டுப்போயிருக்க வேண்டும் அல்லது ஒத்துக் கொள்ளாமல் மாணவ, மாணவியர் வாந்தி எடுத்திருக்க வேண்டும் என்றுஅவர்கள் தெவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications