For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாந்தகுமார் கொலை: நெல்லை கொண்டு வரப்பட்ட குற்றவாளிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள டேனியல் உள்ளிட்டவர்களை சென்னை போலீசார் விசாரணைக்காக திருநெல்வேலி கொண்டுசென்றுள்ளனர்.

ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் அடியாட்கள் எனக் கருதப்படும் டேனியல் உள்ளிட்ட சிலர்தான்ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கொன்றது என்று விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கொடைக்கானலில் புதைக்கப்பட்ட சாந்தகுமாரின் பிணம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப்பரிசோதனை நடந்துள்ளது. தனது கணவர் பிணத்தை ஜீவஜோதியும் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து கடத்தப்பட்ட சாந்தகுமார் திருநெல்வேலியில்தான் வைக்கப்பட்டிருந்தார்என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து திருநெல்வேலியில் அவர் எங்கு வைக்கப்பட்டிருந்தார் என்பதை அடையாளம் காட்டுவதற்காககுற்றவாளிகளுடன் சென்னை போலீசார் திருநெல்வேலி சென்றுள்ளனர்.

டேனியல் தவிர ஹூசேன், தமிழ்ச் செல்வன், கார்மேகம் ஆகிய குற்றவாளிகளும் திருநெல்வேலிக்கு போலீசாரால்அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X