பஸ் கட்டண உயர்வால் 12 வயது பள்ளி மாணவி தற்கொலை
சின்னமனூர்:
தேனி அருகே பஸ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள தென்பழனியைச் சேர்ந்த கெப்பணன் என்பவரின் மகள் இந்திராணி(12). இவர் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தென்பழனியிலிருந்து ஓடைப்பட்டிக்கு பஸ்ஸில்தான் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். சமீபத்தில்இந்திராணியின் தாய் வழக்கம் போல பஸ் காசு கொடுத்து அவரை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அன்றுதான் பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பள்ளிக்குப் போகும்போதே பஸ் காசு முழுவதையும்கொடுத்துத்தான் இந்திராணி டிக்கெட் வாங்கியுள்ளார்.
மாலையில் பள்ளியை விட்டுத் திரும்புவதற்கு காசு இல்லாததால் நடந்தே வீட்டுக்குத் திரும்பியுள்ளார் இந்திராணி.அவருடைய தாயோ, காசு கொடுத்தும் ஏன் பஸ்சில் வராமல் நடந்து வந்தாய் என்ற திட்டியுள்ளார்.
இதனால், இனிமேல் பள்ளிக்குச் செல்வதற்காக கூடுதலாக பஸ் காசு கேட்டால் தாய் திட்டுவாளே என்று பயந்தஇந்திராணி மனமுடைந்து, வீட்டுக்கு அருகே தோப்பில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.