சரணடையத் தொடங்கும் தலிபான்கள்
குவெட்டா:
காண்டஹார் நகரை விட்டுக் கொடுக்கத் தயார் என்று நேற்று (வியாழக்கிழமை) கூறிய தலிபான்கள், முதற்கட்டமாகஇன்று பெரும்பாலான தலிபான்கள் தங்கள் ஆயுதங்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் ஒப்படைக்கஆரம்பித்துள்ளனர்.
ஒப்படைக்கப்படும் ஆயுதங்களை உரிய முறையில் காக்கும் பணியிலும் அந்தக் கமாண்டர்கள் ஈடுபடுவார்கள்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் காண்டஹாரிலிருந்து தலிபான்கள் முற்றிலுமாக காண்டஹாரிலிருந்துஅகற்றப்படுவார்கள் என்று கார்சாய் கூறினார்.
முல்லா ஒமருக்கு "நோ" மன்னிப்பு:
இதற்கிடையே தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று கார்சாய் கூறியுள்ளார்.
அவர் மேல் தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், சட்டத்தின் முன் அவர் கட்டாயம் நிறுத்தப்படுவார். அளிக்கப்படும்தண்டனையையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கார்சாய் கூறினார்.












Click it and Unblock the Notifications