காஷ்மீருக்குள் ஊடுருவும் தலிபான்கள்

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தலிபான் கூட்டம் இந்தியாவில் ஊடுருவ முயன்று வருவதாகராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் அமெரிக்க தாக்குதலுக்கும், நார்த்ர்ன் அலையன்ஸ் படைத் தாக்குதலுக்கும்தப்பி ஓடி வந்த தலிபான்கள் பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயல்கின்றனர்.

இதைத் தடுக்க எல்லைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் கடும் தாக்குதல்:

இந்நிலையில், இன்று வடக்கு காஷ்மீர் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.

இதில் இரண்டு ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.

மேலும் 7 ராணுவத்தினர் உட்பட 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தற்கொலைப் படை தாக்குதல்:

குப்வாரா அருகில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர்கொல்லப்பட்டார். 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்தியபதில் தாக்குதலில் அந்த 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 10 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

ஆர்.டி.எக்ஸ் பறிமுதல்:

இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூரில் ஒரு தீவிரவாதியிடமிருந்து 150 கிலோ ஆர்.டி.எக்ஸ்.வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதை எடுத்து வந்த பரூக் அகமது ஷா என்பவனை ராணுவம் கைது செய்ததது.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள டேயான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கருதப்பட்ட இடத்தில்ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதில் 2 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு சைலன்சர் துப்பாக்கி, நான்கு ராக்கெட்டுகள், 9 பூஸ்டர் ரக ராக்கெட்டுகள்மற்றும் 98 மீட்டர் உள்ள கார்டக்ஸ் வயர்களும் அடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+