இன்ஸ்பெக்டர் இட மாற்றம்: பெண் ஏட்டு சஸ்பெண்ட்
சென்னை:
ரீட்டா மேரி கற்பழிப்பு வழக்குத் தொடர்பாக விழுப்புரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ரீட்டா மேரி விபச்சாரத் தடுப்பு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு செஞ்சி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போதுஅவருக்கு மயக்க ஊசி போட்டு அங்கிருந்த வார்டன்கள் மற்றும் போலீஸார் கற்பழித்தனர்.
இதுகுறித்து ஐ.ஜி திலகவதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் அடிப்படையில் நான்கு வார்டன்கள் உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்போது விழுப்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்மற்றும் பெண் தலைமை காவலர் (ஏட்டு) மோகனசுந்தரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.