Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரீட்-டா மேரி: -ஒ-ரு ப்ளாஸ்-பேக்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரியை வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு வெளியேறிவர்.

அவருக்கு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற ஒரு வாலிபர் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றுதிணடிவனத்தில் உள்ள ஜே.கே. என்ற விபச்சாரப் பகுதியில் விற்றுவிட்டான்.

இங்கு கஸ்டமர்களாக வந்த 4 இளைஞர்களிடம் தான் கடத்தி வைக்கப்பட்டுள்ள விபரத்தை ரீட்டா சொல்ல, கலங்கிப் போன அந்தஇளைஞர்கள் அவரை மீட்க முயன்று தோற்றனர்.

இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். ஆனால், இந்தப் புகாரை ஏற்று விபச்சார விடுதி மாமாக்களைக் கைதுசெய்யாமல் ரீட்டாவையே கைது செய்துக் கொண்டு சென்றது போலீஸ்.

இந்தப் பெண் மீது விபச்சாரப் பட்டம் சூட்டி கைது செய்து செஞ்சி சிறையில் அடைத்தனர். இங்கு இருந்த சிறை வார்டன்கள் அந்த இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு மாறி மாறி கற்பழித்துள்ளனர். இதற்கு அந்தச் சிறையில் இருந்த போலீசாரும் உதவியதோடு அவர்களும்கற்பழித்துள்ளனர்.

திண்டிவனம் விபச்சார விடுதிகளையே அந் நகரில் சில காவல்துறை அதிகாரிகள் தான் நடத்தி வருகிறார்களோ என்று எண்ணும் அளவுக்குநிலைமை மிக மோசமாக உள்ளது. காவல்துறை அதிகாரிகளின் முழு உதவியுடன் தான் இந்த விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குபெண் போலீசாரும் உடந்தையாக இருந்து வருகின்றனர் என்பது தான் கேவலமான விஷயம்.

சிறையில் வைத்து ரீட்டா மேரி கற்பழிக்கப்பட்ட விவரம் வெளிவந்த உடன் ஐ.ஜி. திலகவதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர்தீவிர விசாரணை நடந்தி வருகிறார்.

அவரது பரிந்துரையின்பேரில் தான் இதுவரை பல சிறை வார்டன்கள், போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+