திக்கி பேசும் கணவர்: மாடியிலிருந்து குதித்து மனைவி தற்கொலை
சென்னை:
திக்கி திக்கி பேசும் நபருடன் திருமணம் செய்து கொண்ட பெண் அவருடன் வாழப் பிடிக்காமல் 5-வது மாடியிலிருந்து கீழே குதித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சேத்னா. இவருக்கும், பெங்களூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியருக்கும்சமீபத்தில் திருமணம் நடந்தது. அருண்குமார் திக்கி திக்கிப் பேசுவார். இது சேத்னாவுக்கு பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் திருமணம்செய்து கொண்ட அவர் அருண்குமாருக்கு திக்கிப் பேசுவதை பெரிய குறையாக எண்ணி வந்தார்.
இந் நிலையில் பெங்களூரிலிருந்து அருண்குமாரும், சேத்னாவும் சமீபத்தில் சென்னையில் உள்ள சேத்தனாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.பின்னர் அருண் குமார் பெங்களூர் சென்று விட்டார். இந் நிலையில் திக்குவாய் கணவரை நினைத்து வேதனைப் பட்ட சேத்தனா, தற்கொலைசெய்து கொள்ள முடிவு செய்தார்.
தனது குடும்பம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடிக்குச் சென்ற அவர் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
படித்துப் பட்டம் பெற்றவரான சேத்னா, மிகச் சாதாரண விஷயத்துக்காக தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும்வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications