அமெரிக்க மின் நிலையத்தை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்
கூடலூர்:
கூடலூரில் அமைக்கப்பட்டு வரும் அமெரிக்க மின் நிலையத்தை எதிர்த்து கிராம மக்கள் பெரும் போராட்டம்நடத்தினர்.
ரூ. 1,000 கோடி செலவில் எஸ்.டி.சி.எம்.எஸ். என்ற அமெரிக்க நிறுவனம் இங்கு அனல் மின் நிலையத்தைஅமைத்து வருகிறது. 250 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்துவருகிறது.
இந் நிலையில் இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. பொன்னுசாமி தலைமையில் ஆயிரக்கணக்கானகிராமத்தினர் அந்த மின் நிலையத்துக்குள் நுழைய முயன்றதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்டக் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இந்த மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்த கிராம மக்களுக்கு உரிய இழப்பீடு தராமல் இதன் உரிமையாளர்கள்இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாககொடுத்த உறுதிமொழியையும் இந்த நிறுவனம் மதிக்கவில்லை.
இதையடுத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்குள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதகாகமாவட்டக் கலெக்டர் கொடுத்த உறுதிமொழியையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
பாதுகாப்புக்காக அங்கு போலீஸ் முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.