For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நார்த்தர்ன் அலையன்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதில், கைது செய்யப்பட்டதலிபான் படையினர் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

தலோக்கனுக்குத் தென்மேற்கே பறந்து கொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக இவ்விபத்துஏற்பட்டுள்ளது. தலோக்கனிலிருந்து காபூலுக்குக் கிளம்பும்போதுதான் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்விபத்தில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த முக்கிய கமாண்டர்களும் கொல்லப்பட்டனர்.

குண்டூஸ் நகரில் சரணடைந்த அராப் ஹாஷிம் மற்றும் மிர்சா நசிரி ஆகிய இரண்டு தலிபான் கமாண்டர்களும்இவ்விபத்தில் பலியாகினர்.

பி-52 விமானங்கள் குண்டு மழை:

இதற்கிடையே பின் லேடன் ஒளிந்துள்ளதாகக் கூறப்படும் தோரா-போரா மலைப் பகுதிகளில் அமெரிக்காவின்பி-52 ரக விமானங்கள் இன்று சராமாரியாகக் குண்டு வீசித் தாக்கின.

மிக உயரமான இடத்திலிருந்து குண்டு வீசும் திறமை வாய்ந்த இந்த பி-52 விமானங்கள், கடந்த சில நாட்களாகவேதொடர்ந்து இப்பகுதிகளில் பயங்கரக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

பின் லேடன் இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று 100 சதவீதம் நம்புகிறோம் என்று இப்பகுதியில்சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஆப்கானிய கமாண்டர் ஒருவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X