For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் அருகே மீனவர்கள் கடும் மோதல்: படகுகளுக்குத் தீவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற இடத்தில் மீனவர்களுக்கு இடையே நடந்த கடும் மோதலில் பலபடகுகளுக்குத் தீவைக்கப்பட்டது. 14 பேர் காயமடைந்தனர்.

மரக்காணம் அருகே உள்ள அனுமந்த குப்பம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக 48 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் தற்போது நிபந்தனைஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.

இந்த நிலையில் குப்பத்தில் அடிக்கடி சண்டை நடப்பதால் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று கருதியசிலர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் பல மீனவகிராங்களைச் சேர்ந்த பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களில் சிலரை அனுமந்த குப்பத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதையடுத்துதேவராம்பட்டினம் உள்ளிட்ட சில குப்பத்தைச் சேர்ந்தவர்கள் அனுமந்த குப்பத்திற்குச் பயங்கரஆயுதங்களுடன்சென்றனர்.

ஆனால் அங்கு யாருமே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் கிராமத்தில் இருந்த மீன் பிடி படகுகள்,குடிசைகள் ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட படகுகள், குடிசைகள் தீக்கிரையாகின.14 பேர் அரிவாள்களால் வெட்டப்பட்டனர்.

தகவல் தெரிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குபோலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X