காஷ்மீரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் 10தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டதில் உள்ள சார்கோட் என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராணுவ தேடுதல்வேட்டையில் அடையாளம் தெரியாத நான்கு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3ஏ.கே. ரக துப்பாக்கிகளும் ஒரு ராக்கெட் ஏவுகணையும் கைப்பற்றப்பட்டன.
மேலும் குப்வாராவில் உள்ள சூரனூர் காட்டுப்பகுதியில் நடந்த ராணுவ தேடுதல் வேட்டையில் இரண்டுதீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ஏகே ரக துப்பபாக்கிகள், ஆறு உருதுபத்திரிக்கைகள் மற்றும் நான்கு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
மத்திய காஷ்மீர் பாட்காம் மாவட்டத்தில் உள்ள கார்போரா கிராமத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில்எல்லையோர காவல் படையினர் தீவிரவாதிகளின் மேல் தாக்குதல் நடத்தியபோது, அதைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் தீவிரவாதிகள் சரணடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒருவெளிநாட்டு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
மற்றொரு சம்பவத்தில் மூன்று தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
மேலும் , தெற்கு காஷ்மீர் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள உத்தரசூ என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications