பதவி ஏற்றார் ரணில்: விரைவில் இந்தியா வருகை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பதவி ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், அவருக்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்வு விழாவையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.

ரணிலின் குடும்பத்தினரும், அவருடைய கட்சித் தலைவர்களில் முக்கியமானவர்களும், இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் தலைவர் ராப் ஹக்கீமும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியைப் படமெடுக்க ரணில் குடும்பத்தினருக்குச் சொந்தமான தொலைக்காட்சிஉள்பட பல பத்திரிக்கை நிறுவனங்களுக்கு சந்திரிகா அரசு தடை விதித்திருந்தது.

பதவியேற்றுக் கொண்டதும், அருகில் உள்ள ஒரு புத்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் ரணில். விரைவில் தன்அமைச்சரவையை அவர் அறிவிக்கவுள்ளார்.

இதற்கிடையே பாதுகாப்பு மற்றும் நிதித் துறைகளை ரணில் அமைச்சரவையிடமே ஒப்படைப்பதற்கு சந்திரிகாமுடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் இச்செய்தியை மறுத்துள்ளன.

ஆனால், அமைச்சரவையில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும் இடம் கொடுக்க ரணில் தயாராகஇருப்பதாக "தி சண்டே டைம்ஸ்" பத்திரிக்கை கூறியிருந்தது. இதன் மூலம் அவர் ஒரு தேசிய அரசை அமைக்கப்போவதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.

இந்தியா வருகிறார் ரணில்:

இதற்கிடையே புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வருவதாக கூறப்படுகிறது.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் கோபாலகிருஷ்ண காந்தியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ரணில்,தான் இந்தியா வரவுள்ளதாகக் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே நார்வே குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இந்தியாதன்னுடைய ஆதரவை ஏற்கனவே அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+