35 சட்ட கல்லூரி மாணவர்கள் கைது: வேலூர் சிறையில் அடைப்பு
சென்னை:
சென்னையில் மோதலைத் தொடர்ந்து காயமடைந்த 35 சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே நடந்த இந்த பயங்கரமாக மோதலில் 50 பேருக்குகாயம் ஏற்பட்டது.
பலருக்கு மண்டை உடைந்தது. மேலும் பலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது. இடையில் புகுந்து கூட்டத்தை விலக்கமுயன்ற போலீசாருக்கும் அடி விழுந்தது.
இத் தாக்குதலில் 30 மாணவர்களும் பல போலீசாரும், 10 பொது மக்களும் காயமடைந்தனர்.
இந் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களையும் போலீசாரையும் காவல்துறைகமிஷ்னர் முத்துக்கருப்பன் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை இச்சம்பவத்தில் ஈடுபட்டு, காயமடைந்த 35 மாணவர்கள் இன்று அதிகாலைகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை செய்த நீதிபதி அந்த 35 மாணவர்களையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications