தேசிய முன்னணியில் எந்தப் பிளவும் இல்லை: வைகோ
சென்னை:
தேசிய முன்னணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்த விதநமான பிளவுமில்லை என்று மதிமுக தலைவர்வைகோ கூறியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிருபர்களுக்கு வை.கோ. பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தேசிய முன்னணியில் உள்ள கூட்டணிக்கட்சிகளுக்குள் பிளவு ஏதுமில்லை. மேலும் பாஜகவும், அதிமுகவும்நெருங்கி வருவதாக கூறுவதும் உண்மையில்லை.
திமுகவும் சில கட்சிகளும் வெளியிடும் தேவையில்லாத அறிக்கைகள்தான் தேசிய முன்னணியில் பிளவுஏற்படுவது போன்ற ஒரு தோற்றத்தை எழுப்பியுள்ளன.
தீவிரவாதத்தை எதிர்த்து இயற்றப்பட்டுள்ள பொடோ சட்டத்தை ஆதரித்து ஜெயலலிதா விடுத்துள்ளஅறிக்கையினாலேயே அதிமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாக தோற்றமளிக்கிறது. ஆனால் 1998ல்பாஜகவுக்கு ஜெயலலிதா ஏற்படுத்திய நெருக்குதலை யாராலும் மறக்க முடியாது.
மேலும் சமீபத்தில் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட சந்திப்பில்எந்தவித உள் நோக்கமுமில்லை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications