சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் அதிரடி இட மாற்றம்
சென்னை:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கே. முத்துக்கருப்பன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது அதிரடிப்படை ஐ.ஜி.யாக இருந்து வரும் விஜயகுமார்நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றதும், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர்முத்துக்கருப்பன்.
ஜூன் மாத இறுதியில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது மற்றும் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி திமுகபேரணியின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய சம்பவங்களை அடுத்து, முத்துக்கருப்பனை மத்திய அரசுப் பணிக்குஅனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால், அவரை அனுப்ப முடியாது என்று தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது.
இந்நிலையில் முத்துக்கருப்பன் இன்று இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு திடீரென்று அறிவித்துள்ளது.அவர் தற்போது திருச்சி ஆயுதப் படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முத்துக்கருப்பனுக்குப் பதிலாக, தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளஅதிரடிப்படை ஐ.ஜியான விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அதிரடிப்படை ஐ.ஜியாக நடராஜ் என்ற போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இன்று இரவு சுமார் 07.30 மணியளவில் புதிய சென்னைமாநகர போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புக்களைஒப்படைத்தார் முத்துக்கருப்பன்.