For Daily Alerts
Just In
இலங்கை: பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் ரணில்
கொழும்பு:
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்கே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்கிறார்.
இதனால் அதிபர் சந்திரிகா நேற்று ரணில் விக்கிரமசிங்கேயை அழைத்து பேசினார். அப்போது, அவரை பிரதமராகநியப்பது பற்றியும் அமைச்சரவை விபரங்கள் குறித்தும் விவாதித்தார்.
முதலில் ரணில் பிரதமராக பதவியேற்பது என்றும், அதன் பின்னர் அமைச்சரவையில் யாரை சேர்ப்பது என்பதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. இதை இவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ரணில் பதவியேற்பது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.
இலங்கையின் 14வது பிரதமராகிறார் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]