சாந்தகுமார் கொலையாளிகளுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சரவணபவன் ஓட்டல் அதிபரின் அடியாட்களும் ஜீவஜோதியின் கணவரைக் கொன்றவர்களுமான டேனியல்,கார்மேகம், உசேன், தமிழ்செல்வன் ஆகிய நான்கு பேரையும் மேலும் 3 நாட்கள் போலீசார் காவலில் வைத்துவிசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு பேரையும் ஆஜர் படுத்திய போலீசார்,சாந்தகுமார் கொலை வழக்கில் மேலும் 3 நாட்களுக்கு இவர்களை போலீசார் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதிக்குமாறு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களை மேலும் 3 நாட்களுக்கு போலீசார் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதியளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சரவணபவன் ஹோட்டல் மேனேஜர் காசி என்பவர் பொன்னேரிநீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications