பொள்ளாச்சி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
பொள்ளாச்சிக்கு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவத்தை பற்றி போலீசார் கூறுகையில்,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள், ஒரு கிணற்றில் ஒரு பெண் மற்றும்அவளுடைய 8 வயது மகளும் கிணற்றில் இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளனர்.
இதுபற்றி தகவல் தெரிவிக்க அவர்களின் வீட்டிற்கு போனபோது, அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகாத்திருந்தது. அங்கு அந்த பெண்ணின் தந்தையும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அந்த பெண் சமீபத்தில் தான் தன் கணவனைவிட்டு பிரிந்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் தற்கொலைக்குகாரணம் வறுமையாக இருக்கலாம் என்றும், அதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications