நீதி விசாரணைக்கு வைகோ கோரிக்கை
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல்ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் வந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் 45 சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சட்டக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறினார் வைகோ.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குக்காரணமான போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
மேலும், நடந்த இச்சம்பவம் குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றுகூறினார் வைகோ.