ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் அமெரிக்க படைகள்
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி முற்றிலுமாக அகற்றப்பட்ட போதிலும், அங்கு இன்னும் அதிக அளவில்தன் படைகளைக் குவிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனவே எதிரிகளை முற்றிலுமாக ஒழிப்பது வரை அவர்களுக்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.அதற்கு நிச்சயம் அதிக காலம் பிடிக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஆப்கானிஸ்தானைப் பிடித்து அங்கு ஆட்சி அமைப்பதல்ல எங்கள் நோக்கம். இந்நாட்டு மக்களுக்காக மேலும்என்னவெல்லாம் நல்லது செய்ய முடியும் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம் என்றார் அவர்.
ஒரு நிலையான ஆட்சி ஆப்கானிஸ்தானில் அமையும் வரை, எங்கள் படைகள் அங்கு முகாமிட்டிருக்கும்.விரைவில் கூடுதல் வீரர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள் என்றார் அந்த ராணுவ அதிகாரி.
பி-52 விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை:
இதற்கிடையே அமெரிக்காவின் பி-52 ரக விமானங்கள் ஆப்கானிஸ்தானில் தோரா-போரா மலைப் பகுதிகளில்தொடர்ந்து குண்டு வீசித் தாக்கி வருகின்றன.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இங்குதான் நிச்சயம் பதுங்கியுள்ளதாகக் கருதும் அமெரிக்கா, இன்றும்(திங்கள்கிழமை) அதிகாலையிலேயே சராமாரியாகக் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இன்று காலை 6 மணிக்கு மட்டும் 10 முறை அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளன அமெரிக்க விமானங்கள்.












Click it and Unblock the Notifications