கைதான மாணவர்கள் ஜாமீனில் விடுதலை
சென்னை:
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்யப்பட்ட 35 சட்டக் கல்லூரி மாணவர்கள், மாலை இடைக்காலஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாகவெடித்தது. இதைத் தொடர்ந்து போலீசாரும் தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் 45 சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து,காயமடைந்த 35 சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில்அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றுமாணவர்கள் சார்பில் சென்னை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருப்பதால் அவர்களுக்கு வரும்18ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.