தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விரைவில் தடை?
சென்னை:
தமிழர் விடுதலைப் படை, தமிழ்நாடு மீட்புப் படை ஆகியவற்றிற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பசீலித்துவருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி. சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜம்மு-காஷ்மீல் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.அதில் சுவாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் பாரதீய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
தமிழகத்திலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளான தமிழர் விடுதலைப் படை, தமிழ்நாடு மீட்புப் படைஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால் இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமான ஆதாரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு இந்த அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யும். தற்போது தமிழக அரசின் கோரிக்கை குறித்து பரிசீலனைநடந்து வருகிறது.
தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார். மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த பின் இது இறுதிசெய்யப்படும்.
ஜம்மு-காஷ்மீர் போன்ற எல்லை மாநிலங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு எல்லைப் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் தேவைப்பட்டது.
இதற்காகத்தான் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப்படையினர் திருப்பி அழைக்கப்பட்டனர். இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாகளை மத்திய பணிக்குஅனுப்புமாறு தொடர்ந்து தமிழக அரசை மத்திய அரசு கோரி வருகிறது. ஆனால் இதுதொடர்பாக நிர்ப்பந்திக்கப்போவதில்லை.
பொடோ சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை நிறைவேற்றியே தீருவோம். இந்த சட்டம்தீவிரவாதிகளுக்கு எதிரானது. மக்களுக்கு விரோதமானதல்ல. பத்திக்கையாளர்களுக்கு பாதகமான அம்சம் இந்தசட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
காங்கிரஸ் கட்சி இதை கெளரவப் பிரச்சினையாக கருதுகிறது. ஆனால் அக்கட்சியின் பெரும்பான்மையானதலைவர்கள் இந்த சட்டத்தை ஆதக்கிறார்கள்.
எனவே கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி நாடாளுமன்றத்தில் அதை ஆதரிக்க செய்வார்கள் என்ற நம்பிக்கை பாரதீய ஜனதாக் கட்சிக்குஉள்ளது என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications