For Daily Alerts
Just In
மாணவர்கள் மீது தாக்குதல்: நடந்தது என்ன?
சென்னை:
சென்னையில் வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான மோதலாக மாறியது.
பாரிமுனையில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளியில் உணவு விடுதியில் நேற்றிரவு சாப்பிடச் சென்றபோதுபிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கடும் மோதல் ஏற்பட்டது.
மாணவர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். பதிலுக்கு சோடா பாட்டில்களையும்கற்களையும் வீசி மாணவர்களும் தாக்க அப் பகுதியே ரணகளமாக மாறியது. இந் நிலையில் அங்கு வந்தபோலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் சட்டக் கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டலுக்குள் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தினர்.இதில் பல மாணவர்களுக்கு மண்டை உடைந்தது. மேலும் பலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]