நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் - பொதுமக்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து உண்மை நிலையை அறியநீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும்கலவரமாக வெடித்தது. இதையடுத்து போலீசாரும் தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் 45 மாணவர்கள், சில போலீசார் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்று தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். அலி முகமது தலைமையில் ஒரு நபர் கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை கமிஷன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்என்று தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications