மாணவர்களிடம் விஜயகுமார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீசார் தாக்குதலில் காயமடைந்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களைசென்னையின் புதிய போலீஸ் கமிஷ்னராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகுமார் சந்தித்து விசாரணை நடத்தினார்.
மாணவர்கள் மீதான தாக்குதலையடுத்துத் தான் முத்துக்கருப்பன் தடாலடியாக தூக்கியடிக்கப்பட்டு அந்தப்பதவியில் விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
இன்று மருத்துவமனைக்குச் சென்ற விஜயகுமார் நடந்த விவரங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பலமாணவர்கள் கோபத்துடன் தங்களுக்கு நடந்த அநீதி குறித்து அவரிடம் விளக்கினர்.
தவறு செய்த போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் மாணவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
முன்னதாக சனிக்கிழமை இந்த மாணவர்களை முத்துக்கருப்பனும் சென்று சந்தித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications