தனது தற்கொலையை படமெடுக்க பின் லேடன் பயங்கரத் திட்டம்
டெல்லி:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படையினரிடம் பிடிபடுவதற்கு முன் தற்கொலை செய்யப்போவதாகவும் அதை அல்-ஜசீரா டி.வி. மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதாகவும் அவருடைய மனைவிகூறியதாக இங்கிலாந்துப் பத்திரிக்கைகள் கூறியுள்ளன.
இதன் விளைவாக, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம், லண்டனில் உள்ள பிக் பென்கடிகாரம், பாரிசில் உள்ள ஈபெல் டவர் போன்றவை தகர்க்கப்படும் என்று 45 வயதான ஒசாமாவின் மனைவிசாபிஹா கூறியுள்ளார்.
அமெரிக்கப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அனைத்து அல்-கொய்தா உறுப்பினர்களும்தங்களுடைய மனைவிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பத்திரிக்கையான "தி சன்" கூறியுள்ளது.
"உங்கள் மனைவிகளிடம் துப்பாக்கிகளைக் கொடுத்துப் போராடச் சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளைப்பத்திரமாக குகைகளில் தங்கவைத்து விட்டு, அல்லாவுக்காகப் போராடுங்கள்" என்று வானொலி வழியாக பின்லேடன் தன் உறுப்பினர்களுக்குக் கட்டளையிட்டதாகவும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.