கூடங்குளம் அணு மின் நிலையம்... எம்.எல்.ஏ. போராட்ட எச்சரிக்கை
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள அணு மின் நிலையம் தொடர்பாக, உள்ளூர்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் 19ம் தேதி தர்ணாப் போராட்டம் நடத்தப் போவதாக ராதாபுரம்தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
கூடங்குளம் அணுமின் நலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல்பிரச்சினைகள் குறித்துப் பட்டியலிட்டுள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி விட்டதாககூறப்பட்டது. ஆனால் அதை வாரியத் தலைவர் ஷீலா ராணி சுங்கத் மறுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் அசகவுரியங்களை போக்குவது தாடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில்பாலிவால் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் பொதுமக்களின் குறைகள் போக்கப்படும் என்று உறுதிதரப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
உடனடியாக பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி பெருமளவிலான தர்ணாப்போராட்டம் 19ம் தேதி நடத்தப்படும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.