உருவாகிறது உலகத் தமிழர் வங்கி: பழ.நெடுமாறன் தகவல்
சென்னை:
உலகத் தமிழர்களுக்குப் பொதுவான ஒரு வங்கி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தமிழர் தேசிய கட்சியின்தலைவர் பழ. நெடுமாறன் இன்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் நெடுமாறன் கூறியதாவது:
உலகத் தமிழர்களை ஒன்று படுத்துவதற்கும், தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக்காப்பதற்கும் உலகத் தமிழர் பேரவையை அமைக்கவுள்ளோம்.
இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு கொள்ளும். இந்தப் பேரவை அரசியல் சார்பற்றது. அடுத்த ஏப்ரல் மாதம்சென்னையில் இந்த பேரவையின் தொடக்க விழா நடைபெறவுள்ளது.
இந்தப் பேரவை தொடங்கும் நாளில் 20 நாடுகளில் உள்ள தமிழர் பேரவை பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.
மேலும் உலகத் தமிழர்களுக்குப் பொதுவான வணிக வங்கி ஒன்றும் விரைவில் அமைக்கப்படவிருப்பதாகக் கூறியநெடுமாறன், உலகத் தமிழர் பேரவையின் கொடியையும் இன்று அறிமுகப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications