For Daily Alerts
Just In
ஊட்டியில் பனி மழை
ஊட்டி:
ஊட்டியில் பல பகுதிகளில் தொடர்ந்து பனி மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது பனி சீசன் ஆரம்பித்துள்ளது. இதையடுத்து ஊட்டி உள்பட பலபகுதிகளில் பனி மழை பெய்து வருகிறது.
பனி மழை காரணமாக தேயிலை உள்ளிட்ட பல பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தேயிலை தற்போது அறுவடைப்பருவத்தில் இருப்பதால் பனி மழை காரணமாக தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பனி மழை காரணமாக வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி பெய்து எதிரேவரும் வாகனங்கள் சரியாகத் தெரியாத காரணத்தால் வாகனங்கள் மெதுவாகவே சென்று வருகின்றன.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]