For Daily Alerts
Just In
பொங்கல் போனஸ் இப்போதே வேண்டும்: பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை
சென்னை:
பொங்கல் போனஸை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று பொதுப் பணித்துறை ஊழியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது.கூட்டத்திற்குப் பின் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் சங்க பொதுச் செயலாளர் அல்போன்ஸ் கூறுகையில்,
போனஸ், விழாக்கால அட்வான்ஸ் பணம், டி.ஏ, பி.எப் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகஅனைத்து ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து அரசு பேச்சு நடத்த வேண்டும்.
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு உடனடியாக பொங்கல் போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்என்றும் அவர் கூறினார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]