வேலூர்: கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பலமனேர் பங்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணரெட்டி. இவருக்குகுடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே செலவழித்து வந்துள்ளார்.
இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் வட்டிக்கு பணம் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார். மேலும்கடனுக்கு வட்டி தொகை அதிகமானதால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் மனமுடைந்த நாராயணரெட்டி, அவரது மனைவி மகேஸ்வரி (50), இவரது குழந்தைகள் சுரேஷ் (26),பாபு (25), சுரனா (23), மணி (19) ஆகிய 6 பேரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து பலமனேர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications