For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சர்வதேச நீதிமன்றம் முன் பின் லேடனை நிறுத்துவோம்"

By Staff
Google Oneindia Tamil News

துகாபூல்:

ஒசாமா பின் லேடனைக் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம் என்று ஆப்கானிஸ்தானில்விரைவில் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள ஹமீத் கர்சாய் கூறியுள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு இன்று (திங்கள்கிழமை) முதன் முதலாக டெலிவிஷனில் பேட்டியளித்த கார்சாய்கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிராக ஏராளமான குற்றங்கள் புரிந்துள்ள பின் லேடன், நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் ஒரு சர்வதேச கிரிமினல். ஆயிரக்கணக்கானவர்களைக் கொலைசெய்துள்ளார்.

எங்களுடைய (ஆப்கானியர்களின்) வாழ்க்கை முறையே அவரால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. எனவேஇத்தனைக்கும் காரணமான பின் லேடனை விரைவில் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம்.

முல்லா ஒமர் எங்கு இருக்கிறார் என்றும் இன்னும் தெரியவில்லை. அவரும் பிடிபட்டவுடன் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார். அவருடைய குற்றங்களைப் பொறுத்து அவருக்கும் நிச்சயம் தண்டனை காத்திருக்கிறது என்றார்கர்சாய்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X