பஸ்களில் புதுப்படங்களைத் தடுக்க ஜெ.விடம் திரையுலகினர் மனு
சென்னை:
தனியார் ஆம்னி பஸ்களிலும், அரசு பஸ்களிலும் வீடியோவில் புதுப்படம் போடுவதைத் தடுக்க வேண்டும் என்றுகோரி தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மனுகொடுத்துள்ளனர்.
டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையானதற்காக வாழ்த்துத் தெரிவித்த திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத்தினர், இம்மனுவையும் கையோடு கொடுத்துவிட்டுத் திரும்பினர்.
அந்த பஸ்களில் உள்ள வீடியோவில் புதுப்படங்கள் திரையிடப்படுகிறதா என்று திடீர் சோதனை நடத்திப் பார்க்கவேண்டும் என்றும் ஜெயலலிதாவிடம் இந்தச் சங்கத்தின் தலைவர் இப்ராகிம் ராவுத்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், திருட்டு வி.சி.டியை ஒழிக்கவும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வழங்கப்படும்மானியத்தை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும் தயாரிப்பாளர்கள் ஜெயலலிதாவிடம் கோரிக்கைவிடுத்தனர்.