For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதான 43 தலிபான்கள் மூச்சு திணறி சாவு

By Staff
Google Oneindia Tamil News

நியூ யார்க்:

நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டு கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 43தலிபான் வீரர்கள் மூச்சுத் திணறி இறந்தனர்.

குந்தூஸ் நகரில் பிடிபட்ட இவர்களை செபர்கானில் உள்ள சிறைக்கு 6 கப்பல் கண்டெய்னர் லாரிகள் மூலம்கொண்டு சென்றனர். கண்டெயினருக்குள் காற்று போகவே வழியில்லாததால் இவர்களில் 43 பேர்இறந்துவிட்டனர்.

நார்த்தர்ன் அலையன்ஸ் கமான்டர் ஜுராபெக் கூறுகையில், 3,000 தலிபான் கைதிகள் 6 கண்டெய்னர் லாரிகளில்சிறைக்கு கொண்டு செல்லும்போது இச் சம்பவம் ஏற்பட்டது என்றார்.

விமானநிலையத்தை சுற்றி 1,000 உடல்கள்:

காந்தஹாரில் தலிபான்களுக்கும், நார்த்தர்ன் அலையன்ஸ்க்கும் நடைபெற்ற மோதலில் இறந்த ஆயிரக்கணக்கான தலிபான்கள் உடல்கள் காந்தஹார்விமான நிலையத்தைச் சுற்றி சிதறிக் கிடக்கின்றன.

ரெட் கிராஸ் அமைப்பு கூறுகையில் காந்தஹார் விமான நிலையத்தை சுற்றி 1000 க்கும் மேற்பட்ட உடல்கள் கிடக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டகுழிகளை தோண்டி மொத்தமாக பல உடல்களைப் போட்டு புதைத்து வருகிறோம் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X