சேலம், திருச்சியில் நீதிமன்றத்தைப் புறக்கணித்த வக்கீல்கள்
சேலம்:
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சேலம் மற்றும் திருச்சியைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்திற்குச் செல்வதைப் புறக்கணித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் போலீசார் புகுந்து அவர்களைத் தாக்கியுள்ளனர்.இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும்அம்மாணவர்கள் இன்னும் போராடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் தேர்வுகளையும்புறக்கணித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக சேலம் வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று காலை அவர்கள்நீதிமன்றத்திற்குச் செல்வதைப் புறக்கணித்தனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாகச் சென்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் திருச்சியிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, சென்னை சட்டக் கல்லூரிமாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications