நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் பெரும் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை எடுத்துச் செல்ல சவப் பெட்டிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல்நடந்துள்ளது.

இந்த கேவலமான சம்பவம் இந்திய கண்ட்ரோலர் ஜெனரல் அலுவலகம் நடத்திய விசாரணையில்தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இந்தப் பிரச்சனையைக் கிளப்பிய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கவைத்தனர்.

லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் இந்தப் பிரச்சயைை எதிர்க் கட்சிகள் கிளப்பின. இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள்பதில் சொல்ல முயன்றபோது எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல்மூண்டது.

லோக்சபா இன்று காலை கூடியவுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்உறுப்பினர் பாசுதேப் ஆச்சார்யா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இந்தப்பிரச்சனையைக் கிளப்பினர்.

நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்கு சவப் பெட்டி வாங்கியதில் கூட மத்திய அரசு ஊழல் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனவும்,இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் இதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும்கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதற்கு அனுமதி தர மறுத்த சபாநாயகர் பாலயோகி கேள்வி நேரத்தைத் தொடங்கப் போவதாகக்கூறினார். இதையடுத்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நினறு மத்திய அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பினர்.

உறுப்பினர்களை அமைதியப்படுத்த முயன்ற லோக்சபா சபாநாயகர் பாலயோகியின் முயற்சிகள்பலனளிக்கவில்லை. எதிர்க் கட்சி எம்.பிக்கள் அவையில் மையப் பகுதியில் கூட முயன்றபோது அதைப் படம்பிடித்துக் கொண்டிருந்த டி.வி கேமராக்களை உடனடியாக நிறுத்த பாலயோகி உத்தரவிட்டார்.

பின்னர் சபையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+