For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சக மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள்இன்று (செவ்வாய்க்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசார் அத்துமீறி நுழைந்து தாக்கினர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும்மாணவர்களைப் பற்றி அவதூறாகப் புகார் கூறிய உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா தன் அறிக்கையைத்திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத்தொடங்கினர்.

இது தொடர்பாக தமிழக ஆளுநரிடமும் தமிழக மனித உரிமை கமிஷனிடமும் நாளை மனுக்கள் கொடுக்கப்போவதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து இதுவரை போலீசாரை எதிர்த்துப் பேசாத கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராபின் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X