நிருபர்களைத் தவிர்த்த ஜெயலலிதா
சென்னை:
சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் பத்திரிக்கைநிருபர்களைச் சந்திப்பதை தவிர்த்து விட்டார்.
நேற்று (திங்கள்கிழமை) இரவு திடீரென ஹைதராபாத் புறப்பட்டார் ஜெயலலிதா. இதற்காக அவர் சென்னை விமானநிலையத்திற்கு வந்தார்.
அவரது வருகையை அறிந்திருந்த பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் திரளாக அங்குகூடியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஜெயலலிதாவின் கார், நிருபர்களைப் பார்த்ததும் அங்கிருந்து கிளம்பி இன்னொருநுழைவாயிலுக்குச் சென்று நின்றது. பின்னர் காலிருந்து இறங்கிய ஜெயலலிதா விருட்டென்று உள்ளே சென்றார்.
அங்கு காத்திருந்த முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர்ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெவித்து வழியனுப்பி வைத்தனர்.
ஜெயலலிதாவின் இச்செயலால் கால் கடுக்கக் காத்திருந்த நிருபர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications