சென்னை சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடல்
சென்னை:
மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு வராமல் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதை அடுத்து, சென்னையில் உள்ளடாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு விட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்கியதில் சுமார்50 மாணவர்கள் காயமடைந்தனர். 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றுஇந்த மாணவர்கள் தவிர, சென்னையில் உள்ள முக்கிய அரசுக் கல்லூரி மாணவர்களும் சாலை மறியல்போராட்டங்களை நடத்தினர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை சட்டக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும்தான் தற்போது வகுப்புகள்நடைபெற்று வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு நேற்று தேர்வு ஆரம்பமாகியது.
ஆனால் மாணவர்கள் தேர்வுக்கு வராமல் நேற்றிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அப்போராட்டம்இன்றும் தொடர்ந்தது. மாணவர்கள் வந்து தேர்வு எழுதாமல் இன்றும் புறக்கணித்தனர்.
இதையடுத்து, கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர்ராபின் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications