For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் 2வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) 2வது நாளாக தமிழகம்முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்றும் தேர்வுக்குப் போகாமல் போராட்டம் நடத்தினர். மேலும்அவர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே போலீசார் தாக்குதலில் காயமடைந்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் படி இன்று காலை சென்னை அரசுப்பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கோவையில் மாணவர்கள் உண்ணாவிரதம்...

இந்நிலையில் போலீசார் அராஜகத்தைக் கண்டித்து, கோயம்புத்தூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று ஒருநாள்அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்குஎதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரி அவர்கள்உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

சேலம், திருச்சி, மதுரையில்...

இதற்கிடையே சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் சேலம் மற்றும் திருச்சியிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக, முஸ்லீம் லீக் கண்டனம்...

இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்ற அரசியல் கட்சிகள் போலீசாரின் இந்த அராஜகச்செயலைக் கண்டித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X